Thursday 25th of April 2024 11:21:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
டயகம சிறுமியின் தாயிடம் 2ம் நாளாகவும் நேற்று வாக்குமூலம் பதிவு!

டயகம சிறுமியின் தாயிடம் 2ம் நாளாகவும் நேற்று வாக்குமூலம் பதிவு!


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் அவரது தாயோடு சேர்த்து 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயிடம் இரண்டாம் நாளாகவும் நேற்று பொலிஸார் சுமார் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அதேநேரம் குறித்த சிறுமியை முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்து சென்ற தரகரிடம் இன்று பொலிஸ் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது.

இதேவேளை, சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE