Saturday 20th of April 2024 04:12:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு!

நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு!


தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், சூர்யாவின் வீட்டுக்கு தூப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பா.ம.க. சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போட கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இதன்பேரில் தியாகராயநகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு நேற்று இரவில் இருந்து துப்பாக்கி ஏந்திய 5 பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவர் வெளியில் செல்லும் போது அந்த பொலிசார் உடன் செல்வார்கள் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE