ரஷ்ய இராணுவத்தின் அணு ஆயுதப் படை பிரிவை விசேட எச்சரிக்கையுடனான தயார் நிலையில் இருக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
இது ரஷ்யாவின் மூலோபாய ஏவுகணைப் படைகளுக்கான மிக உயர்ந்த எச்சரிக்கையாகும்.
பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோகு உட்பட சிரேஷ்ட ரஷ்ய இராணுவ அமைச்சர்களிடம் இன்று பேசிய புடின், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை நோக்கி மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மேலும் சட்ட விரோதமான தடைகளையும் விதித்துள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் இதற்கான எதிர்வினை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யா - உக்ரைன் உச்சபட்ச போர் பதற்றங்கள் மத்தியில் இது ஒரு அணுசக்தி யுத்தமாக உருவாகலாம் என்ற அச்சுறுத்தலை புடினின் இந்த எச்சரிக்கை எழுப்பியுள்ளது.