Friday 26th of April 2024 04:34:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு விதித்து அதி விசேட வர்த்தமானி வெளியிட்டது அரசாங்கம்! (2ஆம் இணைப்பு)

367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு விதித்து அதி விசேட வர்த்தமானி வெளியிட்டது அரசாங்கம்! (2ஆம் இணைப்பு)


வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் 367 பொருட்களுக்கு கட்டுப்பாடு விதித்தது இலங்கை அரசாங்கம்.

அத்தியாவசியமற்ற பொருட்கள் என அவை வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அதிவிசேட வர்த்தமானியில் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அப்பிள், தோடம் பழம், திராட்சை உள்ளிட்ட பழ வகைகளும், வெண்ணெய், நீர், வெளிநாட்டு மதுபானங்கள், அழகுசாதன பொருட்கள் என்பனவும் அடங்குகின்றன.

இதற்கு மேலதிகமாக இசைக் கருவிகள், விளையாட்டு மற்றும் இலத்திரனியல் பொருட்கள் என்பனவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு அதிகாரியினால் அனுமதி பத்திரம் வழங்கப்படுவதற்கு முன்னதாக நிதியமைச்சின் செயலாளரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் பதவி விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விரைவில் 300 பொருட்களுக்கு தடை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தமை தெரிந்ததே.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE