Thursday 25th of April 2024 12:02:41 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்து அதிகரிப்பு!

இலங்கையில் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்து அதிகரிப்பு!


இலங்கையில் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்தை கடந்து அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடையவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை நகை கடை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் ஆர். பாலசுப்ரமணியம் விளக்கமளித்துள்ளார்.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதென அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, செட்டியார் தெருவில் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை, 150, 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை, 141, 625 ரூபாவாக காணப்படுகிறதென அவர் குறிப்பிட்டார்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE