Friday 26th of April 2024 04:15:33 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கடும் உணவுப்பஞ்சம்; அரிச்சல் முனையில் மீட்கப்பட்ட தமிழர்கள் வாக்குமூலம்!

இலங்கையில் கடும் உணவுப்பஞ்சம்; அரிச்சல் முனையில் மீட்கப்பட்ட தமிழர்கள் வாக்குமூலம்!


இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு வாழ முடியாததால் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தப்பிவந்ததுள்ளதாக அரிச்சல் முனையில் மீட்கப்பட்டுள்ள தமிழர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள இந்திய கடல் பகுதியான 4ஆம் மணல் திட்டில் இன்று காலை குழந்தைகள் உட்பட ஆறு பேர் தனித்திருந்தமை தமிழ்நாட்டு மீனவர்களால் கண்டறியப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அவர்களை மீட்டு மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ஹேவர்கிரப்ட் கப்பல் அங்கு சென்றனர்.

மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட நிலையில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

நேற்று இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காம் மணல்திட்டு பகுதியில் வந்து இறங்கி உள்ளதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலைஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களான தட்டுபாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தார்களாதாக பாதுகப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்ததால் ஆறு இலங்கை தமிழர்கள் மீது வழக்கு பதிவு செய்த மெரைன் போலீசார் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரிகிளாரி, நிசாத் (4மாத கைக்குழந்தை) மற்றும் கியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட ஆறுபேர் இலங்கையில் இருந்து தப்பித்து இவ்வாறு தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், தமிழ்நாடு, மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE