கர்ப்பிணி மனைவியின் பசியை போக்குவதற்காக பலாப்பழம் பறிக்கச் சென்ற நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எல்பிட்டிய - பிட்டுவல பகுதியில் பலாப்பழம் தொடர்பான தகராறில் நபரொருவர் தனது உறவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கர்ப்பிணியான தனது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மதிய உணவிற்காக குறித்த பலாப்பழத்தை பறித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அது தொடர்பாக ஏற்பட்ட தகராறின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.