இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் இன்று செவ்வாய் கிழமை 4வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காலி முகத்திடல் பகுதியில் தற்காலிக கூடாரங்களை அமைந்து அங்கேயே தங்கியிருந்து தொடர் போராட்டத்தை இளைஞர் யுவதிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அதிகளவானோர், காலி முகத்திடலில், ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடி தமது எதிர்ப்பினை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றிரவு (11) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் கூடி தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
காலி முகத்திடலில் நேற்று இரவு கடும் மழை பெய்த போதிலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலையும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, கொழும்பு