ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு நீதி கோரி காலிமுகத்திடலில் சிங்கள நடிகர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்ட களத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் ரம்புக்கனை படுகொலைக்கு நீதி கோரி சிங்கள நடிகர் குணசேகர இன்று (21) அதிகாலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ரம்புக்கனை சம்பவத்தில் இரத்தம் சிந்தப்பட்டதை குறிக்கும் வகையில் வெள்ளை துணி ஒன்றில் சிவப்பு சாயத்தை தெளித்து உடலின் மேல் போர்த்தியவாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை ரம்புக்கனை படுகொலை சம்பவத்திற்கு நீதி கோரி மாதிரி சடலங்களுடன் ஜனாதிபத செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு காலி முகத்திடல் போராட்ட களத்தில் நேற்று 2வது நாளாகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நேற்று இரவு காலி முகத்திடலில் ஒன்றுகூடியிருந்தவர்கள் தமது கைபேசி மூலம் ஒளி பாய்ச்சி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.