Wednesday 15th of May 2024 11:44:40 PM GMT

LANGUAGE - TAMIL
.
பாடசாலை மைதான விவகாரம்; தாழையடி - புதுக்காட்டு சந்தி வீதியை மறித்து மக்கள் போராட்டம்!

பாடசாலை மைதான விவகாரம்; தாழையடி - புதுக்காட்டு சந்தி வீதியை மறித்து மக்கள் போராட்டம்!


கிளிநொச்சி சோரன்பற்று கணேசா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திற்குரிய காணியில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அடுத்து பிரதேச மக்கள் தாழையடி - புதுக்காட்டு சந்தி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கிளிநொச்சி சோரன்பற்று கணேசா வித்தியாலயத்தின் பயன்பாட்டில் இருந்து வந்த பாடசாலைக்கென ஒதுக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை தனியார் ஒருவர் வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த விளையாட்டு மைதானத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விசாரித்த போதே குறித்த காணி விற்பனை செய்யப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

பாடசாலைக்குரிய விளையாட்டு மைதானம் பாடசாலைக்குரியதாக உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து தாழையடி - புதுக்காட்டு சந்தி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE