யாழ்ப்பாணம் வல்வெட்டி துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் பேரணி மல்லாவியூடாக மாங்குளத்தை வந்தடைந்தது.
பின்னர் பொத்துவிலில் இருந்து வருகை தந்த முள்ளிவாய்க்கால் பேரணியுடன் இணைந்து முல்லைத்தீவு நோக்கி பயணமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டருந்தது.
குறித்த பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ,வேலன் சுவாமிகள் , மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்