நல்லூர் முடமாவடிப் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் முழுமையாக தீப்பற்றி எரிந்து நால்வர் உயிரிழந்தனர்.
ஆலய வீதியில் எதிர் எதிர்த் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கில்களே நேருக்கு நேர் மோதிய சமயம் தீ பற்றிக்கொண்டது. தீ சுவாலை விட்டு எரிந்தமையினால் தீ அயணைப்பு சேவையின் உதவியும் பெறப்பட்டது.
நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் அகப்பட்ட நால்வர் உயிரிழந்தனர்.
இதில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன்போது 4 இளைஞர்கள் பரிதாபகரபாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை கோப்பாய் பொலிசாரினால் மீட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கச்சேரி கிழக்கு என்ற முகவரியைச் சேர்ந்த ரொபின்சன் - சார்லஸ் (வயது-25), பூதர்மடம் கோப்பாய் என்ற முகவரியைச் சேர்ந்த மகேந்திரன் - மகிந்தன் (வயது-25), மத்தலோடை, புன்னாலைக்கட்டுவன் தெற்கு என்ற முகரியைச் சேர்ந்த யோகநாதன் - மேர்வின் டினுஜன் (வயது-17) மற்றும் மயூரன் ஆகிய நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் உதயகுமார் - நிசாந்தன் (இருபாலை) என்பவர் அவச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்