Friday 26th of April 2024 02:03:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
நாளை பாடசாலைகள் நடைபெறாது!

நாளை பாடசாலைகள் நடைபெறாது!


நாடளாவிய ரீதியில் நாளை பாடசாலைகள் நடைபெறாது என்று கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் ஈ.டபிள்யு.எல்.கே.எகொடவெல தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கு (2022.05.20) அன்று விடுமுறை தினமாக்கப்பட்டுள்ளதோடு, 2021 ஆண்டுக்காக க.பொ.த (சா.த) பரீட்சையின் பின்னர், முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2022.06.06 அன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் ஈ.டபிள்யு.எல்.கே. எகொடவெல தெரிவித்துள்ளார்.

இதேவேளை,

வடக்கில் நடைபெறும் என்பது வதந்தி

வடக்கு மாகாண கல்வி நடவடிக்கைகள் நாளை நடைபெறும் என்று அனாமதேய செய்தி ஒன்று பரவி வருகின்றது. அந்தத் தகவலில் உண்மையில்லை என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE