Thursday 25th of April 2024 09:28:13 PM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிவு

அமெரிக்கா - ஈரான் இடையிலான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிவு


அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையில் மூன்றாம் தரப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டுடன் கட்டாரில் நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் செயற்படுத்தும் நோக்கிலான பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்குவதற்காக, அந்த நாட்டின் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இடையே மறைமுக பேச்சுவாா்த்தை கட்டாரில் டைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியம் இந்தப் பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டது. இந்நிலையில் இப்பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் என்ரிக் மோரா நேற்று புதன்கிழமை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய தூதர் என்ரிக் மோராவிடம் ஈரான் விவகாரத்துக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ராப் மல்லே தங்களது நிலைப்பாடுகளை எடுத்துரைத்தாா். அவற்றை, ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை குழு தலைவா் அலி பங்கேரி கனியிடம் மோரா தெரிவித்தாா்.

இந்த மறைமுக பேச்சுவாா்த்தையில், ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கல் குறித்த எந்த உத்தரவாதத்தையும் அமெரிக்க பிரதிநிதி அளிக்கவில்லை. இதன் காரணமாக, எந்த உடன்பாடும் ஏற்படாமல் அந்தப் பேச்சுவாா்த்தை நிறைவடைந்தது என ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்தத் தகவலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அனு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

எனினும், அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தாா்.

மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமுல்படுத்தினார்.அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது.

இதன் காரணமாக அணுசக்தி ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்த ஒப்பந்தத்தை தக்கவைக்க, ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

எனினும், பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உடனடியாக நீக்கும் விவகாரத்தில் இழுபறி நீடித்ததால் பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.அந்த முட்டுக்கட்டையை நீக்குவதற்காக தற்போது கட்டாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் உடன்பாடில்லாமல் முடிவடைந்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE