Wednesday 1st of May 2024 04:50:20 PM GMT

LANGUAGE - TAMIL
-
குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!


பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17ஆம் இலக்க வனப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மூவர் பொகலந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விறகு சேகரிக்க சென்ற போது மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்தமையால் நால்வரும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பொகவந்தலாவை கீழ் பிரிவு தோட்டத்தை சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிக்கன் பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பொகவந்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, குளவி கொட்டுக்கு உள்ளான ஏனைய மூவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE