இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, போட்டியின் முதலாவது நாளான இன்று இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி 222 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அணிசார்பில் அதிகபடியாக தினேஷ் சந்திமால் 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். தினேஷ் சந்திமால் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 22ஆவது அரைச்சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை