இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் நிறைவில் முதல் இனிங்சிற்காக 7 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 191 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 378 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அணிசார்பில் அதிகபடியாக தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 51 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் நசீம் ஷா 58 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், யாசிர் ஷா 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 191 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
அணிசார்பில் அதிகபடியாக ஆகா சல்மான் 62 ஓட்டங்களையும், இமாம் உல் ஹக் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் 42 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதேவேளை, இன்றைய ஆட்டநேர முடிவின் போது இலங்கை அணியை விட பாகிஸ்தான் அணி 187 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை