Friday 19th of April 2024 02:33:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவை வெற்றி கொண்டது இலங்கை!

இந்தியாவை வெற்றி கொண்டது இலங்கை!


ஆசியக் கிண்ண ரி - 20 கிரிக்கெட் தொடரில் சுப்பர் 4 தொடரில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி ஆறு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றது.

இதில் ரோஹிட் சர்மா 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் தில்சான் மதுசங்க 3 விக்கட்டுக்களையும் தசுன் சானக்க 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இலக்கை அடைந்தது.

சுப்பர் 4 தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE