ஆசிய கிண்ண சாம்பியன் அணிக்கான ஒத்திகை போட்டியாக இன்று நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணி அழைத்துள்ளது.
ஆசிய கிண்ணம் ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் தொடரின் சூப்பர் சுற்றின் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மோதுகின்றன.
நாளை மறுதினம் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஒத்திகையாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை