கிளிநொச்சி அம்பாள் குளம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் தொண்ணூறு பானைகளில் பொங்கல் பொங்கப்பட்டு சிறப்பு வழிபாடு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி அம்பாள் குளம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகம் ஆலயத்தை பொறுப்பெடுத்து மிகச் சிறப்பாக ஆலய நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதாலும் ஆலய கட்டுமான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாலும் அவர்கள் பதவிக்கு வருகை தந்து இன்றுடன் மூன்று மாதங்களை எட்டிய நிலையில் காலாண்டு உற்சவமாக அவ் ஊர் மக்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து தொண்ணூறு பானைகளில் பொங்கல் செய்து சிறப்பு வழிபாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி