Friday 19th of April 2024 12:02:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
பங்களாதேஷ் - கொரோட்டா நதியில் படகு  கவிழ்ந்து 24 பேர் பலி - 80 பேரை காணவில்லை!

பங்களாதேஷ் - கொரோட்டா நதியில் படகு கவிழ்ந்து 24 பேர் பலி - 80 பேரை காணவில்லை!


பங்களாதேஷில் பக்தர்களை ஆலயத்துக்கு ஏற்றிச்சென்ற படகொன்று கொரோட்டா நதியில் கவிழ்ந்ததில் அதிலிருந்த 24 பேர் நீரில் மூழ்கிப் பலியாகினர். 70 முதல் 80 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவா்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூா் மக்கள் ஈடுபட்டுள்ளனா்.

பங்களாதேஷ் - பஞ்சகா் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகள் பழைமையான பிரசித்தி பெற்ற போதேஸ்வரி கோயிலுக்கு நவராத்திரி விழா தொடக்கத்தை முன்னிட்டு இந்து பக்தா்களை ஏற்றிச் சென்றபோதே நேற்று ஞாயிற்றுக்கிழமை படகு நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலியான 24 பேரில் 8 குழந்தைகள், 12 பெண்களும் அடங்குகின்றனர்.

குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் அதிகமான பக்தா்கள் படகில் பயணித்ததன் காரணமாக, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீத், பிரதமா் ஷேக் ஹசீனா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

அளவுக்கு அதிகமானோா் பயணிப்பதால் படகுகள் கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவது வங்கதேசத்தில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த மே மாதம் ஏராளமான மக்களை ஏற்றிக்கொண்டு பத்மா நதியில் பயணித்த படகு ஒன்று, மணல் ஏற்றி வந்த படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 26 போ் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE