Thursday 16th of May 2024 11:41:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஹந்தானை பகுதியில்  டீசல் தாங்கி ஊர்தி ஒன்றை கடத்திய இருவர் கைது!

ஹந்தானை பகுதியில் டீசல் தாங்கி ஊர்தி ஒன்றை கடத்திய இருவர் கைது!


கண்டி - ஹந்தானை பகுதியில் வைத்து டீசல் தாங்கி ஊர்தி ஒன்றை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து ஹந்தானை நோக்கி டீசலை காவிச்சென்ற தாங்கி ஊர்தியை அதிகாலை இரண்டு மணியளவில் ஹந்தானை சந்தியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் கடத்தியுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வருகை தந்த நால்வர் தாங்கி ஊர்தியை இடைமறித்து நிறுத்தியதோடு சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிவிட்டு கடத்தி சென்றுள்ளனர்.

இந்நிலையில் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சந்தேக நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE