தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று எழுச்சிபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தியாக தீபம் திலீபன் உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு அவரின் திருவுருவப் படத்துக்கு மாவீரர் ஒருவரின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நினைவேந்தலில் கலந்துகொண்டவர்கள் அன்னாரின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து பூ தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு