Thursday 2nd of May 2024 12:06:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார் - சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு!

தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார் - சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு!


விவசாயம், பெருந்தோட்டம், மீன்பிடி, சுயதொழில் போன்ற அனைத்து துறைகளிலிருந்தும் டொலர்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், உணவில் தன்னிறைவு பெறுவது போல், உணவுக்கான பெருமதி சேர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்றுமதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால தொலைநோக்கு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டம், கடுகம்பளை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் அபிப்பிராயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத தற்போதைய அரசாங்கத்தின் 134 பேர் ராஜபக்சகுடும்பத்தின் திருட்டுகளை காக்கும் அரணாக மாறியுள்ளனர் எனவும், பல்வேறு அடக்குமுறைகளைப்பயன்படுத்தி மக்களை ஒடுக்குகிறார்கள் எனவும், மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாத இச்சந்தர்ப்பங்களிலயே இதுபோன்ற செயல்களை மேற்கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சி என்றவகையிலும், ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியிலும் நாம் எந்நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக உள்ளோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE