சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரச ஊழியர்களுக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
04/2015 பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரிவு 03 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கும் குற்றமாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.