கொழும்பு - பாலத்துறை கஜிமாவத்தை பகுதியில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 25 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.
குறித்த தீப்பரவல் முகத்துவாரம் கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீப்பரவலைக் கட்டுப்படுத்த 12 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டபோதிலும் 25 வீடுகள் முற்றாக எரிந்தழிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.