தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகியவற்றின் முன்னாள் தலைவரான சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா டலஸ், ‘சுதந்திர மக்கள் சபை’யுடன் சங்கமித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக டலஸ் அழகப்பெரும உள்ளடங்கலான 13 எம்.பிக்கள் இணைந்தே ‘சுதந்திர மக்கள் சபை’யை நிறுவியுள்ளனர்.
இந்நிலையிலேயே அவர் மேற்படி சபையுடன் இணைந்துள்ளார்.
இந்த நிகழ்வில் டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சன்ன ஜயசுமன உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கி வந்த முக்கிய புள்ளிகள் அண்மைக்காலமாக டலஸ் தரப்புடன் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.