இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு, 50 ரூபா விசேட பண்ட வரியை நிதியமைச்சு விதித்துள்ளது.
கடந்த 23 ஆம் திகததி முதல் அமுலாகியுள்ள இந்த விசேட பண்ட வரி 3 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், உப்பு இறக்குமதியின்போது, கிலோவொன்று விதிக்கப்படும் 40 ரூபா விசேட பண்ட வரியிலிருந்து 10 ரூபா வசூலிக்கப்பட வேண்டும் என்றும்,
எஞ்சிய தொகையை ஔடத ஒழுங்குபடுத்த அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வணிக நோக்கமன்ற மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நிதி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.