இந்தியாவுக்கு செல்ல முயன்றவர்களை ஐந்தாவது தீடைப்பகுதியில் இறக்கிவிடப்பட்ட நிலையில் ஏழுபேர் இலங்கை கடற்படையால் செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் தலைமன்னார் கடல்பகுதியில் இருந்து இந்தியாவிற்கு சென்ற ஏழு நபர்கள் ஐந்தாவது தீடைப்பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் அப்பகுதியில் கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையால் அங்கிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏழுபேரும் தலைமன்ன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கபடவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆறு சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், தமிழ்நாடு, மன்னார்