Wednesday 8th of May 2024 09:42:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
யாழில் மோட்டார் சைகக்கிள் விபத்தில் படுகாயமடைந்த 21 இளைஞன் உயிரிழப்பு!

யாழில் மோட்டார் சைகக்கிள் விபத்தில் படுகாயமடைந்த 21 இளைஞன் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்றிருந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள் கொண்டிருந்த இளைஞன் கோப்பாய் பகுதிக்கு அண்மையாக வீதியின் வலதுபுறமாக திரும்ப முற்பட்டபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 21ம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் மத்தியூஸ் வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த றோபேட்அன்ரன் - தினுசன் (வயது-21) என்ற இளைஞனே படுகாயமடைந்திருந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனமதிக்ப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞன் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கோப்பாய்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE