Friday 26th of April 2024 05:26:27 PM GMT

LANGUAGE - TAMIL
.
கிளி. புளியம்பொக்கணையில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

கிளி. புளியம்பொக்கணையில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது!


கிளிநொச்சி - புளியம்பொக்கணை பகுதியில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை உழவன் ஊர் மற்றும் கல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அனுமதிப்பத்திரத்துக்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தடையப் பொருட்கள் 29.09.2022 அன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE