நாளைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ள நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாளை (29) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் குறித்த வலயங்களுக்கு இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை M, N, O, X, Y, Z ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கிடையில், CC வலயங்களுக்கு காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.