Friday 19th of April 2024 06:28:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
இடைநிறுத்தப்பட்டுள்ள பொருட்களின்  இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு தீர்மானம்!

இடைநிறுத்தப்பட்டுள்ள பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு தீர்மானம்!


தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பொருட்களின் இறக்குமதியை முன்னுரிமை அடிப்படையில் தளர்த்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யலாம் அல்லது அத்தியாவசியமானவை அல்ல என்ற அடிப்படையில் குறித்த பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடன் கையிருப்பு மிகக் குறைந்த அளவில் உள்ளது. பொது மக்களுக்கு அத்தியாவசிய எரிவாயு, எரிபொருள், சுகாதாரம் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய மக்களுக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே முன்னுரிமைப் பட்டியலை உருவாக்க விரும்பினோம்."

"இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவினால் இது பரிந்துரைக்கப்பட்டது.. அதன்படி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது."

"மருந்து இல்லாத நாட்டில், வெளிநாட்டில் இருந்து காத்தாடிகளை கொண்டு வந்தோம். ஆகஸ்ட் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் 1,465 பொருட்களை நிறுத்தியபோது இவற்றை நிறுத்த வேண்டியிருந்தது."

"பின்னர், வர்த்தக சபைகள் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு 708 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன."

"நாம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் மற்றும் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும். மறுபரிசீலனைக்குப் பிறகு இவற்றைத் தளர்த்த எதிர்ப்பார்த்துள்ளோம்.

"தொழில் துறைக்குத் தேவையானவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகளை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என தெரிவித்த அமைச்சர், இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் உள்ளுர் கைத்தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE