Friday 19th of April 2024 08:10:01 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை கிரிக்கெட் அணியை விடாது துரத்தும் கொரோனா: மேலும் ஒருவருக்கு தொற்றுறுதி!

இலங்கை கிரிக்கெட் அணியை விடாது துரத்தும் கொரோனா: மேலும் ஒருவருக்கு தொற்றுறுதி!


இங்கிலாந்து சுற்றுப்பயணம் நிறைவு செய்து நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி குழாமில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேன்ட் பிளவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் கடந்த தினம் நிறைவு பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து தொடரில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தொடரில் கலந்து கொண்டு நாடு திரும்பிய அனைவருக்கும் கடந்த தினம் உடனடி அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் சில நாட்களுக்கு பின்னர் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேன்ட் பிளவருக்கு கொவிட் அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்போது அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE